தமிழ்நாடு செய்திகள்

2026-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வின் வேஷம் கலையும்- தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2024-07-24 12:33 IST   |   Update On 2024-07-24 12:33:00 IST
  • மத்திய பட்ஜெட்டை கண்டித்து 40 எம்.பி.க்களும் போராட்டம் நடத்தப் போகிறார்களாம்.
  • தாமரை மலர்ந்தே தீரும்.

சென்னை:

வடசென்னை மாவட்ட பாஜக சார்பில் திருவொற்றியூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய பட்ஜெட்டை கண்டித்து 40 எம்.பி.க்களும் போராட்டம் நடத்தப் போகிறார்களாம். அது மட்டும் தான் அவர்களால் முடியும். ஆனால் பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தால் உரிமையோடு பல திட்டங்களை கேட்டு பெற்றுத் தந்திருக்க முடியும்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது எவ்வளவு ஆட்டம் ஆடினீர்கள்? விலைவாசி உயர்வு என்றீர்கள்? மின் கட்டணம் உயர்வு, பால் கட்டணம் உயர்வு என்றீர்கள் ஆனால் இன்று நீங்கள் பல மடங்கு உயர்த்தி இருக்கிறீர்களே இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்.

தி.மு.க.வின் வேஷம் நிச்சயம் 2026 தேர்தலில் கலையும். சூரியன் உதிக்கிறதோ இல்லையோ? இலைகள் துளிர்கிறதோ இல்லையோ? கைகள் உயர்கிறதோ இல்லையோ? தாமரை மலர்ந்தே தீரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News