தமிழ்நாடு

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நாளை முதல் பிரசாரம் தொடக்கம்

Published On 2024-03-31 04:46 GMT   |   Update On 2024-03-31 04:46 GMT
  • 4-ந்தேதி (வியாழக்கிழமை)-காலை 11 மணி-ஊட்டி, இரவு 7 மணி-திண்டுக்கல் பொதுக்கூட்டம்.
  • 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை)-காலை 11 மணி-சோழவந்தான், பகல் 12 மணி-மதுரை, மாலை 4 மணி-பரமக்குடி, மாலை 6 மணி-விருதுநகர் தேர்தல் பொதுக்கூட்டம்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் ஊடகம் மற்றும் செய்தி தெடர்புத்துறை தலைவர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 17-ந்தேதி வரை சூறாவளி பிரசாரம் செய்கிறார். அதன் விவரம் வருமாறு:-

நாளை (ஏப்ரல் 1-ந்தேதி) காலை 9 மணி-சென்னையில் இருந்து புறப்படுதல், (சாலை வழி), காலை 11.30 மணி-ஆற்காடு, மதியம் 3 மணி-வேலூர், மாலை 4 மணி-திருப்பத்தூர், இரவு 7 மணி-கிருஷ்ணகிரி தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)-காலை 11 மணி-சேலம், மதியம் 1 மணி-நாமக்கல், மாலை 6 மணி-கரூர் தேர்தல் பொதுக்கூட்டம்.

3-ந்தேதி (பதன்கிழமை)-காலை 11 மணி-ஈரோடு, பிற்பகல் 3 மணி-திருப்பூர், மாலை 4 மணி-பொள்ளாச்சி, இரவு 7 மணி-கோவை தேர்தல் பொதுக்கூட்டம்.

4-ந்தேதி (வியாழக்கிழமை)-காலை 11 மணி-ஊட்டி, இரவு 7 மணி-திண்டுக்கல் பொதுக்கூட்டம்.

5-ந்தேதி (வெள்ளிக்கிழமை)-காலை 11 மணி-சோழவந்தான், பகல் 12 மணி-மதுரை, மாலை 4 மணி-பரமக்குடி, மாலை 6 மணி-விருதுநகர் தேர்தல் பொதுக்கூட்டம்.

6-ந்தேதி (சனிக்கிழமை)-காலை 11 மணி-ஸ்ரீவில்லிபுத்தூர், மதியம் 3 மணி-கோவில்பட்டி, இரவு 7 மணி-திருநெல்வேலி தேர்தல் பொதுக்கூட்டம்.

7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)-காலை 11 மணி-ராதாபுரம், மாலை 4 மணி-விளவங்கோடு, இரவு 7 மணி-நாகர்கோவில் தேர்தல் பொதுக்கூட்டம்.

8-ந்தேதி (திங்கட்கிழமை)-சென்னை சத்தியமூர்த்தி பவன் வருகிறார்.

9-ந்தேதி-காலை 9.35 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் புறப்படுகிறார். பகல் 12 மணி-பெரம்பலூர், மாலை 4 மணி-திருச்சி, இரவு 7 மணி-சிவகங்கையில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

10-ந்தேதி-காலை 11 மணி-தஞ்சாவூர், பிற்பகல் 3 மணி-திருவாரூர், இரவு 7 மணி-கும்பகோணம், இரவு 11 மணி-ரெயில் மூலம் சென்னைக்கு புறப்படுகிறார்.

11, 12, 13-ந்தேதிகளில் சென்னை சத்தியமூர்த்தி பவன்.

14-ந்தேதி-காலை 10 மணிக்கு சென்னை துறைமுகத்தில் உள்ள அம்பேத்காரின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார்.

மாலை 4 மணி-விழுப்புரம், இரவு 7 மணி-சிதம்பரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

15-ந்தேதி-காலை 11 மணி-புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். மதியம் 2 மணி முதல் 8 மணி வரை-கடலூர் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டம்.

இரவு 11 மணிக்கு கார் மூலம் சென்னை புறப்படுகிறார்.

16-ந்தேதி-மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.

17-ந்தேதி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவள்ளூர் சாலை வழியாக தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

மதியம் 2.30 மணிக்கு திருவள்ளூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News