தமிழ்நாடு செய்திகள்

கருணை மதிப்பெண் NEET-க்கு எப்படி பொருந்தும்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி

Published On 2024-06-13 13:03 IST   |   Update On 2024-06-13 13:03:00 IST
  • நேர பற்றாக்குறை என்பது நீட் தேர்வுக்கு எப்படி பொருந்தும்?
  • ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக மாறி கொண்டிருக்கிறது.

சென்னை:

நீட் தேர்வு தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை.

* எடப்பாடி முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது.

* கடந்த மே மாதம் 5 -ந்தேதி நடந்த நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன.

* நீட் தேர்தவில் 718, 719 மதிப்பெண்கள் என்பது சாத்தியமில்லை.

* கருணை மதிப்பெண்கள் என்ற பெயரில் 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கி குளறுபடி நடைபெற்றுள்ளது.

* கடும் எதிர்ப்பை அடுத்து 1563 பேருக்கு கருணை மதிப்பெண்ணை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது.

* ஒரு கேள்வி விட்டிருந்தால் 716 மதிப்பெண் கிடைத்திருக்கும், ஒரு கேள்வியை தவறாக எழுதியிருந்தால் 715 மதிப்பெண் கிடைக்கும்.

* உச்சநீதிமன்றம் எந்த இடத்திலும் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு தரவில்லை.

* சட்டப்படிப்புக்கான ஆன்லைன் தேர்வையும், மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுதுவதையும் எப்படி ஒப்பிட முடியும்?

* சட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு தொடர்பான தீர்ப்பை நீட் தேர்வுக்கு பொருத்திப்பார்ப்பது சரியல்ல.

* நேர பற்றாக்குறைக்கு கருணை மதிப்பெண் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

* நேர பற்றாக்குறை என்பது நீட் தேர்வுக்கு எப்படி பொருந்தும்?

* ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக மாறி கொண்டிருக்கிறது.

* அரியானாவில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் இருந்து 6 பேர் 720 மதிப்பெண் எடுத்துள்ளனர்.

* 2024-ல் மட்டும் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

* கருணை மதிப்பெண் என முடிவெடுத்த போது தேசிய தேர்வு முகமை யாரிடம் அதனை தெரிவித்தது?

* நீட் குளறுபடிகளால் மாணவர்களிடையே அச்சம் எற்பட்டுள்ளது.

* நீட் விலக்கு மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

* நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தி.மு.க. அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Tags:    

Similar News