அந்நிய மண்ணில் சென்று தாய்நாட்டை அடித்து நொறுக்கும் ராகுலை மக்கள் விரட்டியடிப்பார்கள்- குஷ்பு
- எதிர்க்கட்சியினரும், ராகுல் காந்தியும் இந்தியாவை அந்நிய மண்ணில் அடித்து நொறுக்குவதில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள்.
- தாய்நாட்டை பழித்த ராகுல் காந்தியை மக்கள் அடித்து விரட்டும் காலம் விரைவில் வரும்.
சென்னை:
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல் காந்தி அங்குள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசும் போது பிரதமர் மோடி பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார்.
ராகுலின் இந்த கருத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அந்நிய மண்ணில் சென்று தாய் நாட்டின் புகழை கெடுப்பதா என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் இது தொடர்பாக பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
எதிர்க்கட்சியினரும், ராகுல் காந்தியும் இந்தியாவை அந்நிய மண்ணில் அடித்து நொறுக்குவதில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள். இது அவர்கள் பார்க்க படிக்க சுவையாக இருக்கலாம். ஆனால் மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தாய்நாட்டை பழித்த ராகுல் காந்தியை மக்கள் அடித்து விரட்டும் காலம் விரைவில் வரும். பிரதமர் மோடியின் திறமையான தலைமையின் கீழ் இந்தியா வளர்ந்து வருகிறது. உலகில் மிக வேகமாக வளரும் நாடாக தனது சிறகுகளை விரித்து உயர பறக்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.