தமிழ்நாடு செய்திகள்

விருப்ப மனுக்களைப் பெற மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு - ராமதாஸ் அறிவிப்பு

Published On 2026-01-12 18:21 IST   |   Update On 2026-01-12 18:21:00 IST
  • சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்புவோரது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
  • தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று தேதி நீட்டிப்பு.

விருப்ப மனுக்களைப் பெற மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்புவோரது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் விருப்பமனுவை பெறுவதற்கான தேதியை 13.1.2026 செவ்வாய்கிழமை மற்றும் 14.1.2026 புதன்கிழமை ஆகிய இருநாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News