தமிழ்நாடு

மோடி பிரதமராக 50 சதவீதம் தான் வாய்ப்பு...! இது காயத்ரி ரகுராமின் கணிப்பு

Published On 2023-11-11 10:17 GMT   |   Update On 2023-11-11 10:17 GMT
  • அண்ணாமலையால் ஒரு இஞ்ச் கூட பா.ஜனதா வளரவில்லை என்பது தான் உண்மை.
  • எடப்பாடி பழனிசாமி திறமையான அரசியல்வாதி. அவரது தலைமையில் அ.தி.மு.க. நிச்சயம் வளரும்.

பா.ஜனதாவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் அரசியல் பக்கம் தலைகாட்டாமல் இருக்கிறார். இருந்தாலும் அண்ணாமலையை அவ்வப்போது வெளுத்து வாங்குகிறார். இது தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இடைவெளிதான். நிச்சயமாக அரசியலுக்கு வருவேன். பெண்களுக்கு எந்த கட்சியில் மரியாதை இருக்கிறதோ அந்த கட்சியில் இணைந்து செயல்படுவேன் என்றார். அவர் மேலும் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மோடியின் பெயரால் பா.ஜனதா சற்று வளர்ந்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் அண்ணாமலையால் ஒரு இஞ்ச் கூட பா.ஜனதா வளரவில்லை என்பது தான் உண்மை.

எடப்பாடி பழனிசாமி திறமையான அரசியல்வாதி. அவரது தலைமையில் அ.தி.மு.க. நிச்சயம் வளரும். கடந்த தேர்தலில் 2½ சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் அ.தி.மு.க. தோற்றது. இப்போது பா.ஜனதாவிடம் இருந்து வெளியேறியது அந்த கட்சிக்கு கூடுதல் ஆதாயத்தை தான் கொடுக்கும் என்றார்.

Tags:    

Similar News