தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் உதயநிதியை குறுகிய வட்டத்தில் பார்க்க வேண்டாம்- சபாநாயகர் அப்பாவு கருத்து

Published On 2022-12-15 08:35 IST   |   Update On 2022-12-15 08:35:00 IST
  • இளைஞர் நலத்துறைக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று இருப்பதால், இளைஞர்கள், மாணவர்களை சர்வதேச தரத்தில் கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
  • வாரிசு அரசியல் பற்றி கேட்டால், கருணாநிதி முதலமைச்சராக பதவிக்கு வரும்போது அண்ணா ஆட்சி போல இருக்காது என்றனர்.

சென்னை:

தமிழக அமைச்சராக ராஜ்பவனில் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த சபாநாயகர் அப்பாவு, பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

இளைஞர் நலத்துறைக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று இருப்பதால், இளைஞர்கள், மாணவர்களை சர்வதேச தரத்தில் கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

வாரிசு அரசியல் பற்றி கேட்டால், கருணாநிதி முதலமைச்சராக பதவிக்கு வரும்போது அண்ணா ஆட்சி போல இருக்காது என்றனர். அவர் மறைவுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகும்போதும் வாரிசு அரசியல் என்றுதான் கூறினர். இந்த இளம் வயதில் தனது குடும்ப வாழ்க்கையில் பல சந்தோஷங்கள், கனவுகளை விட்டுவிட்டு நாட்டுக்காக ஒருவர் உழைப்பதற்கு முன்வந்திருப்பது பெருமைக்குரியது. எனவே குறுகிய வட்டத்தில் பார்க்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News