தமிழ்நாடு

பொன்முடி பதவியேற்பு விவகாரம்: தேர்தல் ஆணையத்தை நாட தி.மு.க. முடிவு

Published On 2024-03-18 06:13 GMT   |   Update On 2024-03-18 06:16 GMT
  • கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
  • கவர்னர் ஆர்.என்.ரவி பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி இன்னும் அழைப்பு விடுக்கவில்லை.

சென்னை:

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

இதன் காரணமாக திருக்கோவிலூர் தொகுதி காலியிடம் என்று தேர்தல் கமிஷனில் அறிவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்பட்டு விட்டது.

பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

இதற்காக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் புதிய அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க சட்டத்தில் இடம் உள்ளதா? அதில் என்னென்ன காரணங்கள் கூறப்பட்டுள்ளது என்பது சம்பந்தமாக விரிவாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வந்தார்.

இதன்பிறகு டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை வந்தார். ஆனாலும் இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அவர் அழைப்பு விடுக்கவில்லை. இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கேட்டதற்கு, இது தொடர்பாக அரசிடம் இருந்து கடிதம் வந்தால் அதை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் அனுப்பி வைப்போம் என்று தெரிவித்தார்.

எனவே பொன்முடி விஷயத்தில் தேர்தல் ஆணையத்துக்கு மறுபடியும் கடிதம் எழுதலாமா? வேண்டாமா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.சென்னை:

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.

இதன் காரணமாக திருக்கோவிலூர் தொகுதி காலியிடம் என்று தேர்தல் கமிஷனில் அறிவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்பட்டு விட்டது.

பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

இதற்காக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் புதிய அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க சட்டத்தில் இடம் உள்ளதா? அதில் என்னென்ன காரணங்கள் கூறப்பட்டுள்ளது என்பது சம்பந்தமாக விரிவாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வந்தார்.

இதன்பிறகு டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை வந்தார். ஆனாலும் இன்னும் பொன்முடியை அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அவர் அழைப்பு விடுக்கவில்லை. இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கேட்டதற்கு, இது தொடர்பாக அரசிடம் இருந்து கடிதம் வந்தால் அதை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் அனுப்பி வைப்போம் என்று தெரிவித்தார்.

எனவே பொன்முடி விஷயத்தில் தேர்தல் ஆணையத்துக்கு மறுபடியும் கடிதம் எழுதலாமா? வேண்டாமா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

Tags:    

Similar News