தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பழனிசாமி பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்

Published On 2024-03-27 08:37 GMT   |   Update On 2024-03-27 08:37 GMT
  • வருகிற 5-ந்தேதி மாலை 4 மணிக்கு திருப்பூர் கவுந்தம்பாடி, இரவு 7 மணிக்கு ஈரோடு பூந்துறை ரோடு, கஸ்பா பேட்டை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
  • 13-ந்தேதி மாலை 4.30 மணிக்கு விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

சென்னை:

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் வருகிற 5-ந்தேதி மற்றும் 13-ந்தேதி ஆகிய தேதிகளுக்கான சுற்றுப் பயணத் திட்டம் மட்டும் கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது.

வருகிற 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு திருப்பூர் கவுந்தம்பாடி, இரவு 7 மணிக்கு ஈரோடு பூந்துறை ரோடு, கஸ்பா பேட்டை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 13-ந்தேதி மாலை 4.30 மணிக்கு விழுப்புரம் பொதுக்கூட்டம், மாலை 5.30 மணிக்கு தியாகதுருகம், கள்ளக்குறிச்சியிலும், இரவு 7 மணிக்கு ராணிப்பேட்டை எம்.ஜி.ஆர். திடல், ஆத்தூர் ஆகிய பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News