தமிழ்நாடு

அரசு சார்பில் பிரதமரை வரவேற்க சென்றேன்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

Published On 2024-03-05 04:00 GMT   |   Update On 2024-03-05 04:00 GMT
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அரசாங்க உத்தரவை தான் நான் செய்தேன்.
  • இது அரசாங்கத்தின் பணி. இதில் தனிநபர் விருப்பமோ இல்லை அரசியலோ கிடையாது.

சென்னை:

மதுரையில் பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அது குறித்து உங்கள் கருத்து என்ன என்று பத்திரிகையாளர் ஒருவர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* மதுரை வந்த பிரதமர் மோடியை அரசு சார்பில் வரவேற்க சென்றேன்.

* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அரசாங்க உத்தரவை தான் நான் செய்தேன். இது அரசாங்கத்தின் பணி. இதில் தனிநபர் விருப்பமோ இல்லை அரசியலோ கிடையாது.

* பிரதமருக்கும், எனக்கும் தனிப்பட்ட உறவுபோல் சிலர் போலி செய்திகளை பரப்புகின்றனர் என்று கூறினார்.

Tags:    

Similar News