தமிழ்நாடு செய்திகள்

பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Published On 2024-10-16 13:32 IST   |   Update On 2024-10-16 13:32:00 IST
  • நாராயணபுரம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணி கைகொடுத்துள்ளதை மக்களை கேட்டாலே தெரியும்.

பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் வெள்ள தடுப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

நாராயணபுரம் ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏரியில் ஜேசிபி மூலம் வண்டல் மண் கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

நாராயணபுரம் ஏரியில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* கடந்த 3 மாதங்களாகவே மழை நீர் வடிகால் பணிகளை செய்து வந்தோம்.

* அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளன.

* அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணி கைகொடுத்துள்ளதை மக்களை கேட்டாலே தெரியும்.

* தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி, பல்துறை ஊழியர்களுக்கு சென்னை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

* மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின் சென்னை மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று கூறினார்.

Tags:    

Similar News