தமிழ்நாடு

கிளாம்பாக்கத்தில் அடிப்படை வசதி இல்லை என்று யாரும் குறை சொல்லவில்லை: அமைச்சர் சேகர்பாபு

Published On 2024-02-13 07:25 GMT   |   Update On 2024-02-13 10:19 GMT
  • கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிறுசிறு பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும்.
  • கிளாம்பாக்கத்தில் பிரச்சனைகள் இருந்தால் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். நேரில் அழைத்து செல்கிறோம்.

சென்னை:

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இன்று விவாதம் நடைபெற்றது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிறுசிறு பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும். திறப்பதில் அவசரம் காட்டியதாலேயே பயணிகளுக்கு சிரமம் என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில்

* கிளாம்பாக்கம் பேருந்து முனையம் குறித்து யாரும் புகார் கூறவில்லை.

* கிளாம்பாக்கத்தில் 100 கோடி அளவிலான பணியை திமுக அரசு மேற்கொண்டது.

* கிளாம்பாக்கத்தில் விரைவில் ரெயில் வசதி ஏற்படுத்தப்படும்.

* கிளாம்பாக்கத்தில் அடிப்படை வசதி இல்லை என்று யாரும் குறை சொல்லவில்லை.

* இரவு நேரத்தில் பேருந்துகள் இல்லை என்ற குறைபாடு மட்டும்தான் வருகிறது என்று கூறினார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் தொடர்பாக சிறுசிறு பிரச்சனைகள் குறித்து ஈபிஎஸ், அமைச்சர் சேகர்பாபு இடையே விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில் பெரிய பிரச்சனைகளையும் தீர்த்த பிறகே பேருந்து முனையத்தை திறந்தோம் என்று ஈபிஎஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதனை தீர்த்து வைக்க தயாராக உள்ளோம்.

கிளாம்பாக்கத்தில் பிரச்சனைகள் இருந்தால் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். நேரில் அழைத்து செல்கிறோம். பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம் என்று முதலமைச்சர் தெரிவித்து விவாதத்தை முடித்து வைத்தார்.

Tags:    

Similar News