தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தலில் போட்டி? குஷ்பு சொன்ன பதில்

Published On 2024-03-10 16:48 GMT   |   Update On 2024-03-10 16:48 GMT
  • பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்.
  • பா.ஜ.க.-வை சேர்ந்த குஷ்பு தேர்தலில் போட்டியிடுவது குறித்து பதில் அளித்துள்ளார்.

வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்த போது, பாராளுமன்றத்தில் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது பேசிய அவர், "கமல்ஹாசனுக்கு மாநிலங்களவையில் ஒரு சீட் கொடுத்துள்ளார்கள். தி.மு.க.வில் பிரசாரம் செய்வதற்கு யாரும் இல்லை. தி.மு.க.வுக்கு கமல்ஹாசன் போன்ற முகம் பிரசாரம் செய்வதற்கு தேவை. அதைத் தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நினைத்துள்ளார். கூட்டத்திற்காக முதலமைச்சருக்கு கமல்ஹாசன் தேவையா?"

"பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டா எங்கு நிற்க சொன்னாலும், நிற்பேன். நாடு முழுக்க பிரசாரம் செய்ய சொன்னாலும் முழுவீச்சில் பிரசாரம் செய்வேன்," என்று தெரிவித்தார்.  

Tags:    

Similar News