தமிழ்நாடு செய்திகள்
திருவள்ளூரில் காலை நேரத்தில் பார்களில் மது விற்ற 5 பேர் கைது
- திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் டவுன் போலீசார் திருவள்ளூர் நகரை சுற்றி இருக்கும் 4 டாஸ்மாக் பார்களில் திடீர் சோதனை நடத்தினர்.
- கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
டாஸ்மாக் பார்களில் அரசு அறிவித்த நேரத்தை தாண்டி மற்ற நேரங்களிலும் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்தி ரதாசனுக்கு புகார் வந்தது.
இந்த புகாரின் பேரில் இன்று காலை 8 மணி அளவில் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் டவுன் போலீசார் திருவள்ளூர் நகரை சுற்றி இருக்கும் 4 டாஸ்மாக் பார்களில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில், கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.