தமிழ்நாடு

சேலத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி

Published On 2024-03-24 04:14 GMT   |   Update On 2024-03-24 04:25 GMT
  • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று பிரசாரத்தை தொடங்கினார்.
  • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

சேலம்:

பாராளுமன்ற தேர்தலையொட்டி தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவிக்கப்பட்டு விட்டன.

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று பிரசாரத்தை தொடங்கினார்.

சேலம் பெரிய சோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய அவர் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து இன்று மாலை திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வண்ணாங்கோவில் நவலூர் குட்டப்பட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.

இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரிக்கிறார். இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று பேசுகின்றனர்.

Tags:    

Similar News