தமிழ்நாடு

காதல் தோல்வியால் விபரீதம்- கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-06-16 04:24 GMT   |   Update On 2023-06-16 04:24 GMT
  • காதல் விபரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் நேரடியாக வந்து ராகுலை கண்டித்தனர்.
  • சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்:

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கரட்டுப்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராகுல் (வயது 24). இவர் திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளியல் படித்து வந்தார். சின்னாளப்பட்டியில் தனியாக அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த அதே கல்லூரியில் படித்த மாணவி ஒருவருக்கும் காதல் மலர்ந்தது.

இந்த காதல் விபரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் நேரடியாக வந்து ராகுலை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த ராகுல் தனது அறையிலேயே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அருகில் இருந்த நபர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News