தமிழ்நாடு

சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலைக்கு மாதவரத்தில் இருந்து 30 சிறப்பு பஸ்கள்

Published On 2024-04-22 06:26 GMT   |   Update On 2024-04-22 06:26 GMT
  • சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 527 பஸ்களும், நாளை 628 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
  • www.tnstc.in மற்றும் செயலி மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

மாதவரம்:

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 527 பஸ்களும், நாளை (23-ந்தேதி) 628 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி சென்னை மாதவரத்தில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாதவரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்றும், நாளையும் கூடுதலாக தலா 30 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் www.tnstc.in மற்றும் செயலி மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News