தமிழ்நாடு

கோவை மோதல் விவகாரம்- அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

Published On 2024-04-12 07:39 GMT   |   Update On 2024-04-12 07:39 GMT
  • ஆவாரம்பாளையத்தில் நேற்றிரவு 10 மணியை தாண்டி அண்ணாமலை பிரசாரம்.
  • ஏற்கனவே பாஜகவினர் 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

கோவையில் திமுக கூட்டணி கட்சியினர் மீது பாஜகவினர் நேற்று தாக்குதல் நடத்தினர்.

இந்த விவகாரம் தொடர்பாக கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை ஆவாரம்பாளையத்தில் நேற்றிரவு 10 மணியை தாண்டி அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டதாக திமுகவினர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே பாஜகவினர் 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News