என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "coimbatore conflict"
- ஆவாரம்பாளையத்தில் நேற்றிரவு 10 மணியை தாண்டி அண்ணாமலை பிரசாரம்.
- ஏற்கனவே பாஜகவினர் 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
கோவையில் திமுக கூட்டணி கட்சியினர் மீது பாஜகவினர் நேற்று தாக்குதல் நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை ஆவாரம்பாளையத்தில் நேற்றிரவு 10 மணியை தாண்டி அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டதாக திமுகவினர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே பாஜகவினர் 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவை:
கோவை விளாங்குறிச்சி ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 48). டிரைவர். இவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த அனில்குமார் (40), ராஜா மணி (24) மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த முனீஸ்.
சம்பவத்தன்று இரவு முனீஸ், ராஜசேகரிடம் அவரது வீட்டில் தங்கிக் கொண்டு காலை புறப்பட்டு செல்வதாக கூறினார். அதற்கு ராஜசேகர் மறுத்தார். இதனால் முனீஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முனீஸ் மறுநாள் காலை அணில்குமார் மற்றும் ராஜாமணியை அழைத்துக் கொண்டு ராஜசேகர் வீட்டிற்கு வந்தார். அங்கு 3 பேரும் சேர்ந்து ராஜசேகரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் ராஜசேகரை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கினர். அப்போது ராஜாமணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜசேகரை குத்தினார்.
பின்னர் அவரது வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றனர். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராஜசேகர் சத்தம் போட் டார். அவரின் சதத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்த ராஜசேகர் கோவில்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அணில்குமார் மற்றும் ராஜாமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய முனீஸ்சை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்