தமிழ்நாடு

கூவம் ஆற்றில் மிதந்து வந்த இளம்பெண் சடலம்- கொலை செய்யப்பட்டாரா?

Published On 2023-10-12 08:45 GMT   |   Update On 2023-10-12 08:45 GMT
  • போலீசார் மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பெண்ணின் உடலை கயிறு கட்டி மீட்டனர்.
  • அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.

பூந்தமல்லி:

திருவேற்காடு அடுத்த காடுவெட்டி தரைப்பாலம் அருகே உள்ள கூவம் ஆற்றில் பெண் பிணம் ஒன்று மிதந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் திருவேற்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பெண்ணின் உடலை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும். சுடிதார் அணிந்து இருந்தார்.அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.

அவர் கொலை செய்யப்பட்டு கூவம் ஆற்றில் வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருவேற்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த 2 நாட்களில் மாயமான பெண்கள் பற்றிய விபரங்களையும் சேகரித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News