தமிழ்நாடு

அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் - அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

Published On 2024-03-26 12:29 GMT   |   Update On 2024-03-26 16:11 GMT
  • சிங்கை ராமச்சந்திரன் தந்தை கோவிந்தராஜ் 1991 முதல் 1996 வரை எம்.எல்.ஏ.-வாக இருந்தார்
  • எனது தந்தையின் கோட்டாவில் சீட் வாங்கியதாக அண்ணாமலை தவறான தகவல் கூறியது வருத்தம் தருகிறது

கோவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் மகன் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அண்ணாமலை கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தவர். அதே கல்லூரியில்தான் சிங்கை ராமசந்திரனும் படித்தார். தனக்கு மதிப்பெண் மூலமாக பிஎஸ்ஜி கல்லூரியில் இடம் கிடைத்ததாகவும், சிங்கை ராமச்சந்திரனுக்கு அவரது அப்பா எல்.எல்.ஏ. ஒதுக்கீடு மூலம் இடம் கிடைத்ததாகவும் கூறினார். மேலும் சிங்கை ராமச்சந்திரன் அகமதாபாத் ஐஐஎம்-வில் படித்தவர்.

சிங்கை ராமச்சந்திரன் தந்தை கோவிந்தராஜ் 1991 முதல் 1996 வரை எம்.எல்.ஏ.-வாக இருந்தார். அப்போது சிங்கை ராமச்சந்திரனுக்கு வயது 11. சிங்கை ராமச்சந்திரன் கல்லூரியில் 2002-ம் ஆண்டு சேருவதற்கு முன்னதாகவே இறந்துவிட்டார். இறந்து போன ஒருவர் எப்படி கல்லூரியில் இடம் வாங்கித் தர முடியும்? என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் எம்.பி.ஏ. பட்டம் வாங்கியவர் சிங்கை ராமச்சந்திரன். அதுவுமா எம்.எல்.ஏ கோட்டா? என கேள்வி எழுப்பியுள்ளனர்

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்,எனது தந்தையின் கோட்டாவில் சீட் வாங்கியதாக அண்ணாமலை தவறான தகவல் கூறியது வருத்தம் தருகிறது. 

நான் டிப்ளமோவில் நன்றாக படித்ததால் எனக்கு மேல்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தது. அண்ணாமலை உண்மைக்கு மாறான தகவல்களை சொல்கிறார்.

அண்ணாமலைக்காவது அப்பா இருந்தார், அவர் கல்லூரிக்கு அழைத்து சென்றார். எனக்கு அப்பா இல்லை நான் மட்டும் தனியாக பஸ் ஏறி போய் கல்லூரிக்கு சென்றேன்.

அண்ணாமலை இவற்றை சொல்லும் போது இதையெல்லாம் சொல்ல வேண்டி இருக்கின்றது. எனது தந்தையின் இறுதி சடங்கிற்கு கூட கஷ்டப்பட்டு கடன் வாங்கி செய்தோம்.

காரை விற்று கடனை அடைத்தோம், பேச வேண்டும் என்றால் நிறைய பேசலாம். இவர் இப்படி பேசியதால் , எங்கள் கட்சியில் அப்பாவின் விசுவாசிகள் மற்றும் அவரை சார்ந்தவர்கள் கடுமையான வேதனை அடைந்துள்ளனர்.

இதற்கு அண்ணாமலை மறைந்த என் தந்தை குறித்து பேசியதற்கு அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News