தமிழ்நாடு

பவானிசாகர் அருகே புலி சாலையை கடந்து ஓடிய காட்சி.

ஒரே நேரத்தில் சாலையை கடந்த புலி, யானை - வாகன ஓட்டிகள் பீதி

Published On 2023-12-31 05:20 GMT   |   Update On 2023-12-31 06:48 GMT
  • வீடியோ காட்சிகளை பார்த்த அண்ணா நகர் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
  • யானைகள் தண்ணீர் குடிக்க இங்கும் அங்கும் ரோட்டை கடப்பது வாடிக்கையான ஒன்றுதான்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், புலி, சிறுத்தை, காட்டெருமை, கழுதைப்புலி, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று மாலை சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் புலி மற்றும் யானை ஒரே நேரத்தில் ரோட்டை கடந்து சென்றது. இதை அந்த வழியாக வந்த வாகன ஒட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார். பின்னர் அவர் அந்த வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ காட்சிகளை பார்த்த அண்ணா நகர் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பொதுவாக இந்த பகுதியில் யானை நடமாட்டம் இருப்பது சகஜம் தான். ஆனால் புலி நடமாட்டம் இருப்பதை கண்டு மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இது குறித்து பவானி சாகர் வனத்துறையினர் கூறும்போது,

பவானிசாகரில் இருந்து அண்ணாநகர் செல்லும் வழியில் 2 பக்கமும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வப்பொழுது யானைகள் தண்ணீர் குடிக்க இங்கும் அங்கும் ரோட்டை கடப்பது வாடிக்கையான ஒன்றுதான்.

ஆனால் புலி நடமாட்டம் மிகவும் அரிதான ஒன்று. எனவே இந்த பகுதி மக்கள் இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம். அதேபோல் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News