செய்திகள்
முருகன்

வேலூர் ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம்

Published On 2020-12-01 07:17 IST   |   Update On 2020-12-01 07:17:00 IST
மகள், தாயுடன் பேச அனுமதிக்க வேண்டும் என்று முருகன் கடந்த 23-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
வேலூர் :

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஜெயிலில் பிற கைதிகள் தங்களது குடும்பத்துடன் வீடியோ காலில் பேசி வருகிறார்கள்.

இதேபோல முருகன் தனது மனைவியுடன் பேசினார். இந்த நிலையில் மகள், தாயுடன் பேச அனுமதிக்க வேண்டும் என்று முருகன் கடந்த 23-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் ஜெயில் உணவுகளை தவிர்த்து பழம் மற்றும் தண்ணீர் மட்டும் சாப்பிடுவதாக கூறப்படுகிறது. நேற்று 8-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவரின் உடல் நலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News