செய்திகள்
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மழை
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
வேலூர்:
வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறிவருகிறது. இந்த புயலை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு முன்எச்சரிக்கைகளை எடுத்து இருக்கிறது. கடலோர பகுதி முழுவதும் உஷார்படுத்தப்பட்டு இருக்கிறது.
நிவர் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், தரங்கம்பாடியில் லேசான மழை பெய்து வருகிறது.
வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறிவருகிறது. இந்த புயலை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு முன்எச்சரிக்கைகளை எடுத்து இருக்கிறது. கடலோர பகுதி முழுவதும் உஷார்படுத்தப்பட்டு இருக்கிறது.
நிவர் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், தரங்கம்பாடியில் லேசான மழை பெய்து வருகிறது.