செய்திகள்
ஆரணியில் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்ததில் மேலும் 2 பெண்கள் பலி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்ததில் மேலும் 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
ஆரணி:
ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியை சேர்ந்தவர் முக்தாபாய் (வயது50). பூ வியாபாரி. இவரது வளர்ப்பு மகள் மீனா(18).
இவர்களது வீடு அருகே ஜானகிராமன் (45) என்பவர் அவரது மனைவி காமாட்சி (35), மகன்கள் சுரேஷ்(15), ஹேமநாத் (13) ஆகியோருடன் வசித்து வந்தார்.
இவர்களது பக்கத்து வீட்டில் சந்திரம்மாள் (65) என்பவர் வசித்து வந்தார்.
முக்தாபாய் கடந்த 15-ந் தேதி காலை 7 மணிக்கு டீ போடுவதற்காக சிலிண்டரை பற்ற வைத்தார். அப்போது கியாஸ் சிலிண்டரில் தீ பரவி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் முக்தாபாயின் வீடு முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது. ஜானகிராமன், சந்திரம்மாள் ஆகியோரின் வீட்டு சுவர்களும் இடிந்து விழுந்தன.
இதில் காமாட்சி, அவரது மகன் ஹேமநாத், சந்திரம்மாள் ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
படுகாயமடைந்த முக்தாபாய், மீனா, ஜானகிராமன், சுரேஷ் ஆகிய 4 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி முக்தாபாய், அவரது வளர்ப்பு மகள் மீனா ஆகிய இருவரும் இன்று காலை பரிதாபமாக இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியை சேர்ந்தவர் முக்தாபாய் (வயது50). பூ வியாபாரி. இவரது வளர்ப்பு மகள் மீனா(18).
இவர்களது வீடு அருகே ஜானகிராமன் (45) என்பவர் அவரது மனைவி காமாட்சி (35), மகன்கள் சுரேஷ்(15), ஹேமநாத் (13) ஆகியோருடன் வசித்து வந்தார்.
இவர்களது பக்கத்து வீட்டில் சந்திரம்மாள் (65) என்பவர் வசித்து வந்தார்.
முக்தாபாய் கடந்த 15-ந் தேதி காலை 7 மணிக்கு டீ போடுவதற்காக சிலிண்டரை பற்ற வைத்தார். அப்போது கியாஸ் சிலிண்டரில் தீ பரவி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் முக்தாபாயின் வீடு முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது. ஜானகிராமன், சந்திரம்மாள் ஆகியோரின் வீட்டு சுவர்களும் இடிந்து விழுந்தன.
இதில் காமாட்சி, அவரது மகன் ஹேமநாத், சந்திரம்மாள் ஆகிய 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
படுகாயமடைந்த முக்தாபாய், மீனா, ஜானகிராமன், சுரேஷ் ஆகிய 4 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி முக்தாபாய், அவரது வளர்ப்பு மகள் மீனா ஆகிய இருவரும் இன்று காலை பரிதாபமாக இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.