செய்திகள்
சீர்காழி அதிமுக எம்எல்ஏ பிவி பாரதி

சீர்காழி அதிமுக எம்.எல்.ஏ. பி.வி.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2020-08-27 04:56 GMT   |   Update On 2020-08-27 04:56 GMT
மயிலாடுதுறை சீர்காழி அதிமுக எம்.எல்.ஏ. பி.வி.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:

தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் மயிலாடுதுறை சீர்காழி அதிமுக எம்.எல்.ஏ. பி.வி.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் வருகையொட்டி பரிசோதனை மேற்கொண்ட நிலையில் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News