செய்திகள்
மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published On 2019-10-16 02:59 GMT   |   Update On 2019-10-16 02:59 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இன்றும் மழை நீடிக்கிறது. இதன் காரணமாக புதுக்கோட்டையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்விரி அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News