செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ஆடு, மாடு, கோழிகள் வழங்கப்படும்- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

Published On 2018-12-05 04:49 GMT   |   Update On 2018-12-05 04:49 GMT
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ஆடு, மாடு, கோழிகள் வழங்கப்படும் என்று சென்னிமலையில் நடந்த விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #GajaCyclone #UdumalaiRadhakrishnan
சென்னிமலை:

சென்னிமலையில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் அதிகமாக இருந்தது. அதற்கு 85 மருத்துவ குழுக்களை உருவாக்கி சிகிச்சை கொடுத்து தற்போது கோமாரி நோய் கட்டுக்குள் உள்ளது.

அதே போல் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் பகுதியில் நோய் தாக்குதல் இருந்தது. அங்கும் 50 சிறப்பு மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு நோய் கட்டுக்குள் உள்ளது.

மேலும் நோய் பரவாமல் தடுக்க இன்னும் 15 நாட்களுக்கு கால்நடை சந்தைகள் நடப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் நோய் பரவாமல் தடுக்கப்படும். சத்தியமங்கலம் பகுதியில் நோய் பரவல் இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கும் மருத்துவ குழுவினர் விரைந்துள்ளனர்.

ஈரோடு, திருப்பூர் உள்பட 6 மாநகராட்சிகளில் 24 மணி நேரமும் செயல்படும் கால்நடை பாலி கிளினிக்குகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தற்போது கோமாரி நோய் தாக்குதலில் இறந்த கால்நடைகளை கணக்கெடுத்து வருகிறோம். இவர்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி முதலமைச்சருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.

கஜா புயல் பாதித்த பகுதி மக்களுக்கு மத்திய அரசு நிதி கொடுத்த பின்பு விலையில்லா ஆடுகள், மாடுகள், கோழிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #UdumalaiRadhakrishnan
Tags:    

Similar News