செய்திகள்

சிறுமியை கற்பழித்து கொன்ற குற்றவாளியை மனநிலை சரியில்லாதவர் என சித்தரிப்பதா?- ஸ்டாலின் கண்டனம்

Published On 2018-11-01 10:05 GMT   |   Update On 2018-11-01 10:05 GMT
சேலத்தில் சிறுமியை கற்பழித்து கொன்ற குற்றவாளியை மனநிலை சரியில்லாதவர் என சித்தரிப்பதாக முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

சேலத்தில் 13 வயது சிறுமி ராஜலட்சுமியை பாலியல் வன்கொடுமை செய்து, தலையை துண்டித்த அரக்கனை குண்டர் சட்டத்தில் சிறைக்குள் தள்ளாமல் மனநிலை சரியில்லாதவர் என்று சித்தரிப்பதாக தெரிகிறது.

முதல்-அமைச்சர் மாவட்டத்தில் கொடுங்குற்றத்திற்கு நீதி வழங்கும் லட்சணம் இதுதானா? இரும்புக் கரத்தால் அடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
Tags:    

Similar News