செய்திகள்

ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதவியில் இருப்பது நியாயம் இல்லை- குமரி ஆனந்தன்

Published On 2018-10-23 11:36 GMT   |   Update On 2018-10-23 11:36 GMT
ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதவியில் இருப்பது நியாயம் இல்லை என்று நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் கூறியுள்ளார். #KumariAnanthan
நாமக்கல்:

நாமக்கல்லில் இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாமக்கல் கவிஞருக்கு சிலை வைக்க வேண்டும். சிலையை நாமக்கல்லிலும் வைக்கலாம். சென்னை போன்ற இடங்களிலும் வைக்கலாம். அவருடைய நினைவை போற்றுகின்ற வகையில் நினைவு மண்டபமும் கட்டலாம். முதல் முதலாக தொடங்க வேண்டியது நாமக்கல்லில் தான். அரசு விழாவாக அவருடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று வேண்டுகிறேன். இல்லையென்று சொன்னால் எங்களை போன்றவர்கள் அல்ல, நாமக்கல் கவிஞரை போற்றுகின்ற அத்தனை பேர்களும், சேர்ந்து நாமக்கல் கவிஞர் சிலையை நிறுவுவதற்கு முன்வரவேண்டும். அனுமதியை வேண்டுமானால் தாருங்கள்.

ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும், பொறுப்பில் இருந்தாலும் அப்படி நடக்கவில்லை, மக்கள் நம்புகின்ற வகையில் ஆதாரங்களோடு வெளியில் சொன்னால், ஆதாரங்களை காட்டினால் அவர்கள் இருக்கின்ற பதவியிலேயே இருக்கலாம். இல்லையென்றால் பதவியில் இருப்பது கூட நியாயமில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #KumariAnanthan
Tags:    

Similar News