செய்திகள்

புதுவையில் கனமழை அறிவிப்பு - அதிகாரிகளுடன் நாராயணசாமி இன்று மாலை ஆலோசனை

Published On 2018-10-05 09:24 GMT   |   Update On 2018-10-05 09:24 GMT
தமிழகம் முழுவதும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து புதுவையில் கனமழையை எதிர்கொள்வது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று மாலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். #RedAlertWarning #Narayanasamy
புதுச்சேரி:

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

அன்றைய தினம் 20 முதல் 25 செ.மீ. மழை கொட்டித்தீர்க்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் கூடுதலாக மழைபெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடலோர பகுதியான புதுவையிலும் கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழையை எதிர்கொள்வது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று மாலை 4 மணிக்கு சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இதில் மாவட்ட கலெக்டர், அரசு துறையின் செயலர்கள், இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது, தண்ணீர் தேங்காமல் வெளியேற்றும் வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. #RedAlertWarning #Narayanasamy

Tags:    

Similar News