செய்திகள்

கோவையில், நாளை காங்கிரசார் பேரணி- ஆர்ப்பாட்டம்

Published On 2018-09-13 14:48 GMT   |   Update On 2018-09-13 14:48 GMT
கோவையில் நாளை காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பேரணி தொடங்குகிறது. இதில் திருநாவுக்கரசர் - முகுல் வாஸ்னிக் பங்கேற்கிறார்கள். #congress #thirunavukkarasar

கோவை:

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தலின் படி கோவை மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சித்தாபுதூர் மகளிர் பாலிடெக்னிக்கில் இருந்து தொடங்குகிறது.

பேரணி ஆர்.டி.ஓ. அலுவலகம் வழியாக கோவை தெற்கு தாலுகா அலுவலகம் சென்றடைகிறது.

மத்திய பாரதீய ஜனதா அரசின் ரபேல் போர் விமான பேர ஊழலை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான சஞ்சய் தத் ஆகியோர் பேசுகிறார்கள்.

இதில் மாநில ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, மாநில பொது செயலாளர் வீனஸ் மணி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் வட்டார தலைவர்கள்உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள். கோவை ராமநாதபுரம் வட்ட தலைவர் கணேசன் நன்றி கூறுகிறார்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கலெக்டரை சந்தித்து மனு அளிக்கிறார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு வெற்றி பெற செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார். #congress #thirunavukkarasar

Tags:    

Similar News