செய்திகள்

பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீன் மனு 4-ந் தேதி ஒத்திவைப்பு

Published On 2018-08-28 10:18 GMT   |   Update On 2018-08-28 10:18 GMT
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலா தேவி ஜாமீன் மனுவை வருகிற 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. #NirmalaDevi
மதுரை:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையின் அடிப்படையில் காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டனர்.

நிர்மலாதேவி ஜாமீன் வழங்கக்கோரி சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுகளில் மனுத்தாக்கல் செய்தார். இதுவரை 6 முறை தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இந்த நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கோரியதை தொடர்ந்து மனு மீதான விசாரணை செப்டம்பர் 4-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நேற்று இதே வழக்கில் தொடர்புடைய உதவி பேராசிரியர் முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் செப்டம்பர் 4-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #NirmalaDevi
Tags:    

Similar News