செய்திகள்
மதுரையில் இன்று, டிராபிக் ராமசாமியிடம் அ.தி.மு.க.வினர் வாக்குவாதம் செய்தனர்.

மதுரையில் டிராபிக் ராமசாமியுடன் அ.தி.மு.க.வினர் மோதல்

Published On 2018-07-07 15:34 IST   |   Update On 2018-07-07 15:34:00 IST
மதுரையில் இன்று டிராபிக் ராமசாமியுடன், அ.தி.மு.க.வினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை:

மதுரை அழகர்கோவில் ரோட்டில் வடக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் உள்ளது. அதற்கு எதிரே உள்ள பிளாட்பாரத்தில் அ.தி.மு.க.வினர் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர்.

இன்று காலை அந்தப்பகுதிக்கு வந்த பிரபல சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தனது செல்போனில் பிளக்ஸ் பேனர்களை படம் பிடித்தார். மேலும் அதை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து தகவல் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கான நடைபாதையில் எவ்வாறு பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி கொடுக்கப்பட்டது? என்பது குறித்து டிராபிக் ராமசாமி அதிகாரியிடம் போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்டோர் டிராபிக் ராமசாமியை முற்றுகையிட்டு கோ‌ஷம் எழுப்பினர். ஒருசிலர் நடுரோட்டில் அமர்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அ.தி.மு.க.வினரை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு டிராபிக் ராமசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்த சம்பவத்தால் மதுரை-அழகர்கோவில் சாலையில் இன்று சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. சிறிது நேரத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அங்கு வந்தார். அங்கு நின்று கொண்டிருந்த டிராபிக் ராமசாமியை சந்தித்து பேசினார்.

உடனடியாக பிளக்ஸ் பேனர்களை அகற்றுவதாக எம்.எல்.ஏ. தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்டது.
Tags:    

Similar News