செய்திகள்

மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், பாலகிருஷ்ணன், கமல் மீது வழக்கு

Published On 2018-05-24 06:48 GMT   |   Update On 2018-05-24 06:48 GMT
தூத்துக்குடி சென்ற தலைவர்கள் மீது 144 தடையை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டாலின் உள்பட 6 தலைவர்கள் மீதும் போலீஸ் தடை சட்டம் 143, 188, 153ஏ ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானர்கள். பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

துப்பாக்கி சூட்டை கண்டித்த தலைவர்கள் தூத்துக்குடிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதேபோல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பாலகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஆகியோரும் ஆஸ்பத்திரிக்கு சென்று ஆறுதல் கூறினார்கள்.

இதற்கிடையே தூத்துக்குடி சென்ற தலைவர்கள் மீது 144 தடையை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டாலின் உள்பட 6 தலைவர்கள் மீதும் போலீஸ் தடை சட்டம் 143, 188, 153ஏ ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Thoothukudifiring
Tags:    

Similar News