செய்திகள்
கோப்புப்படம்

சார்ஜாவில் இருந்து கோவைக்கு 3 கிலோ தங்கம் கடத்தி வந்தவர் கைது

Published On 2018-05-15 23:14 GMT   |   Update On 2018-05-15 23:14 GMT
சார்ஜாவில் இருந்து கோவைக்கு 3 கிலோ தங்கம் கடத்தி வந்த நபரை கைது செய்த அதிகாரிகள் அவரிடமிருந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
கோவை:

சார்ஜாவில் இருந்து கோவைக்கு நேற்று அதிகாலை வந்த விமானத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த உனைஷ் என்பவர் வந்தார். அவர் கொண்டு வந்த எம்.பி.3 பிளேயர் மற்றும் ஸ்பீக்கர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 2 கிலோ 988 கிராம் எடையுள்ள 52 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.

இதன் மதிப்பு ரூ.96 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். இதனைத்தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த உனைஷ் என்பவரை அதிகாரிகள் கைது செய்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். 
Tags:    

Similar News