செய்திகள்

புதுக்கோட்டையில் இருந்து நெடுவாசலுக்கு பேரணியாக செல்ல முயன்ற 25 பேர் கைது

Published On 2017-04-16 19:49 IST   |   Update On 2017-04-16 19:49:00 IST
புதுக்கோட்டையில் இருந்து நெடுவாசலுக்கு இன்று சைக்கிளில் பேரணியாக செல்ல முயன்ற 25 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் 4-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் இருந்து நெடுவாசலுக்கு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சேர்ந்தவரும், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளருமான விடுதலை குமரன் தலைமையில் சுமார் 25பேர் நெடுவாசலுக்கு இன்று காலை சைக்கிளில் பேரணியாக புறப்பட்டனர்.

இதையறிந்த போலீசார் விரைந்து சென்று பேரணியாக செல்ல முயன்ற 25 பேரையும் மறித்து கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News