டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினர் கோகோ காப், ஸ்விடோலினா

Published On 2025-04-30 22:08 IST   |   Update On 2025-04-30 22:08:00 IST
  • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
  • அமெரிக்க வீராங்கனை கோகோ காப் காலிறுதியில் வெற்றி பெற்றார்.

மாட்ரிட்:

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.

இதில் கோகோ காப் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஜப்பானின் உசிஜிமாவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News