விளையாட்டு

கோப்பையுடன் ஜெய்ப்பூர் அணி

புரோ கபடி லீக் - புனேவை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஜெய்ப்பூர்

Published On 2022-12-17 19:52 GMT   |   Update On 2022-12-17 19:52 GMT
  • இறுதிப்போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, புனேரி பால்டனை எதிர்கொண்டது.
  • இதில் ஜெய்ப்பூர் அணி 33- 29 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

மும்பை:

9-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சுனில் குமார் தலைமையிலான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, பசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. இருப்பினும், கடைசி நேரத்தில் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய ஜெய்ப்பூர் அணி இறுதியில் 33- 29 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் 2வது முறையாக புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

Tags:    

Similar News