விளையாட்டு

பாலியல் வன்கொடுமை புகார்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது

Published On 2025-08-08 10:05 IST   |   Update On 2025-08-08 10:05:00 IST
  • ஹைதர் அலியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது.
  • மான்செஸ்டரில் உள்ள வணிக வளாகத்தில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வம்சாவளி பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டதை அடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

'ஏ' அணியில் இடம்பெற்றிருந்த 24 வயதான ஹைதர் அலி மீது கூறப்பட்ட புகாரில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்தது.

பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணி இங்கிலாந்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. கடந்த மாதம் 23-ந்தேதி மான்செஸ்டரில் உள்ள வணிக வளாகத்தில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்படுகிறது. இதையடுத்து ஹைர் அலியை கைது செய்த போலீசார் அவரின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து அவரை ஜாமினில் விடுவித்துள்ளதாக தெரிவித்தனர். 

Tags:    

Similar News