டி20 உலகக் கோப்பை: நேபாள அணிக்கு 185 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து!
- இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
- இங்கிலாந்து அணியின் ஜேக்கப் பெத்தல் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார்.
2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இருநாடுகள் இணைந்து நடத்தும் தொடரின் 5வது போட்டியில் நேபாாளம் மற்றும் இங்கிலாந்து அணிகள் களம்கண்டன. மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி நேபாளம் அணியின் அபாரமான பந்துவச்சில் சற்றே தடுமாறியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் 1 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய ஜாஸ் பட்லர் (26), டாம் பேன்டன் (2), சாம் கர்ரன் (2) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், ஜேக்கப் பெத்தெல் 55 ரன்கள் (4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) விளாசினார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹாரி ப்ரூக் அபாரமாக ஆடி 53 ரன்களை (4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) சேர்த்தார். கடைசியில் வில் ஜாக்ஸ் தன் பங்கிற்கு 18 பந்துகளில் 39 ரன்களை (1 பவுண்டரி, 4 சிக்சர்கள்) எடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்துள்ளது. நேபாளம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய தீபிந்திர சிங், நந்தன் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், ஷெர் மல்லா, சந்தீப் லமிஷேன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.