கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவுக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

Published On 2026-02-07 20:50 IST   |   Update On 2026-02-07 20:50:00 IST
  • அபிஷேக் சர்மா தனது முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்
  • தனி ஒருவனாக போராடிய சூரியகுமார் அரைசதம் அடித்து அசத்தினார்.

10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இந்தத் தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

முதல் நாளில் 3 போட்டிகள் நடக்கிறது. முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தானும் 2 ஆவது போட்டியிலும் ஸ்காட்லாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றது.

இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி அமெரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அபிஷேக் சர்மா தனது முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். 6 ஆவது ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. இஷான் கிஷன் 20 ரன்னிலும் திலக் வர்மா 25 ரன்னிலும் அவுட்டாக துபே முதல் பந்தில் டக் அவுட்டானார்.

அடுத்ததாக இறங்கிய ரிங்கு சிங் 6 ரன்னிலும் ஹர்திக் பாண்ட்யா 5 ரன்னிலும் அக்சர் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தனி ஒருவனாக போராடிய சூரியகுமார் அரைசதம் அடித்து அசத்தினார்.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 161 ரன்கள் அடித்தது. சூர்யகுமார் 84 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Tags:    

Similar News