கிரிக்கெட் (Cricket)

பெண்கள் பிரீமியர் லீக்: பெங்களூருவில் 15-ந்தேதி மினி ஏலம்

Published On 2024-11-29 10:34 IST   |   Update On 2024-11-29 10:34:00 IST
  • ஒரு அணிக்கு ரூ.15 கோடி வரை செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • இது கடந்த ஆண்டைவிட ரூ.1½ கோடி அதிகமாகும்.

புதுடெல்லி:

ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் 3-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது.

இதில் பங்கேற்கும் 5 அணிகள் 71 வீராங்கனைகளை தக்கவைத்துள்ளன. மற்ற வீராங்கனைகள் ஏலத்துக்கு வருகிறார்கள்.

இந்த நிலையில் டபிள்யூ.பி.எல். போட்டிக்கான வீராங்கனைகளின் மினி ஏலம் வருகிற 15-ந் தேதி பெங்களூருவில் நடக்கிறது. ஒரு அணிக்கு ரூ.15 கோடி வரை செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.1½ கோடி அதிகமாகும்.

Tags:    

Similar News