கிரிக்கெட் (Cricket)

கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கியது ஏன்- அஜித் அகர்கர் விளக்கம்

Published On 2025-10-04 18:09 IST   |   Update On 2025-10-04 18:09:00 IST
  • 2027 ஒருநாள் உலக கோப்பையில் விளையாட ரோகித், கோலி முனைப்பு காட்டவில்லை.
  • 3 FORMAT-களுக்கு வெவ்வேறு கேப்டன்களை வைத்திருப்பதும் நடைமுறைக்கு சாத்தியமற்றது.

வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நீக்கி விட்டு சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஒருநாள் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லை நியமித்ததுக்கான காரணத்தை இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

2027 ஒருநாள் உலக கோப்பையில் விளையாட ரோஹித், கோலி முனைப்பு காட்டவில்லை. 3 FORMAT-களுக்கு வெவ்வேறு கேப்டன்களை வைத்திருப்பதும் நடைமுறைக்கு சாத்தியமற்றது. ஒருநாள் போட்டிகள் குறைவாகவே விளையாடுகிறோம். இப்போதே கில்லை கேப்டனாக நியமித்தால்தான் 2027 உலகக் கோப்பைக்கு தயாராக முடியும்.

என கில் கூறினார்.

Tags:    

Similar News