ரஞ்சி கோப்பை: டானிஷ் மாலேவர் சதத்தால் விதர்பா முதல் நாள் முடிவில் 254/4
- டாஸ் வென்ற கேரளா அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதல் நாள் முடிவில் விதர்பா அணி 254 ரன்கள் எடுத்துள்ளது.
நாக்பூர்:
ரஞ்சி கிரிக்கெட்டில் விதர்பா, கேரளா அணிகள் மோதும் இறுதிப்போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது.
விதர்பா அணி 3-வது முறையாகவும், கேரளா முதல் முறையாகவும் கோப்பையை கையில் ஏந்த வரிந்து கட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இந்நிலையில், டாஸ் வென்ற கேரளா அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, விதர்பா அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரிலேயே பர்த் ரிகாடே டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய தர்ஷன் நலகண்டே ஒரு ரன்னில் வெளியேறினார். துருவ் ஷோரே 16 ரன்னில் ஆட்டமிழந்தார். விதர்பா அணி 24 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.
4வது விக்கெட்டுக்கு டானிஷ் மாலேவர் உடன் கருண் நாயர் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. கருண் நாயர் அரை சதம் கடந்து 86 ரன்னில் அவுட்டானார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி215 ரன்கள் குவித்தது.
பொறுப்புடன் ஆடிய மாலேவர் சதமடித்து அசத்தினார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் விதர்பா அணி 86 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்துள்ளது. டானிஷ் மாலேவஎ 138 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.