கிரிக்கெட் (Cricket)

தொடரும் சோகம்... கடைசி 3 ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டியிலும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி தோல்வி

Published On 2025-11-03 08:12 IST   |   Update On 2025-11-03 08:12:00 IST
  • தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
  • இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்காவின் கோப்பை கனவு தகர்ந்தது.

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த தோல்வியின் மூலம் முதல்முறையாக மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்காவின் கோப்பை கனவு தகர்ந்தது.

குறிப்பாக ஐசிசி நடத்திய கடைசி 3 (50 ஓவர் மற்றும் டி20) தொடர்களிலும் இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்கா மகளிர் அணி தோல்வி அடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

அதாவது 2023, 2024ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை மற்றும் 2025ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரிலும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 2வது இடத்தை பிடித்தது.

Tags:    

Similar News