கிரிக்கெட் (Cricket)
இந்தியா- இங்கிலாந்து 2-வது போட்டியால் ஒடிசா கிரிக்கெட் வாரியத்திற்கு வந்த சிக்கல்
- இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது.
- 2-வது இன்னிங்சின் போது மின்விளக்கு பழுதானதால் கிட்டதட்ட 35 நிமிடங்கள் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த போட்டியின் போது கட்டாக் மைதானத்தில் உள்ள மின்விளக்கு பழுதானது. இது குறித்து விரிவான விளக்கம் கேட்டு ஒடிசா கிரிக்கெட் வாரியத்திற்கு ஒடிசா அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2-வது இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென மின்விளக்குகள் எரியாததால் 35 நிமிடங்களுக்கு போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.