கிரிக்கெட் (Cricket)

8-வது வரிசையில் களமிறங்கி ஆஸ்திரேலியாவில் சதம் விளாசிய முதல் இந்தியர்- நிதிஷ் ரெட்டி சாதனை

Published On 2024-12-28 16:31 IST   |   Update On 2024-12-28 16:31:00 IST
  • இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது.
  • அதிகபட்சமாக நிதிஷ் குமார் 105 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

இதனை தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த போட்டியில் நிதிஷ் ரெட்டி சதம் விளாசினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் இளம் வயதில் சதம் விளாசிய 3-வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

மேலும் 8-வது வரிசையில் களமிறங்கி ஆஸ்திரேலிய மண்ணில் சதம் விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையையும் நிதிஷ் குமார் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இளம் வயதில் சதம் விளாசிய வீரர்கள் பட்டியல்:-

1. சச்சின் - 18 வயது 256 நாட்கள்

2. ரிஷப் பண்ட் - 21 வயது 92 நாட்கள்

3. நிதிஷ் ரெட்டி - 21 வயது 216 நாட்கள்

4. தத்து பட்கர் - 22 வயது 46 நாட்கள்

Tags:    

Similar News