ஐ.பி.எல்.(IPL)

அந்த ஒரு நிமிஷம் கேப்டனாக மாறிய விராட் கோலி- வைரலாகும் வீடியோ

Published On 2025-05-29 21:47 IST   |   Update On 2025-05-29 21:47:00 IST
  • டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
  • முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 101 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 1 சுற்றில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கதில் இருந்தே தடுமாறியது.

முதலில் விக்கெட்டுகள் வீழ்ந்த போது அடுத்த வந்த வீரர்கள் பொறுமையாக விளையாடாமல் அதிரடியாக விளையாடியதால் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் அந்த அணி 14.1 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்நிலையில் இந்த போட்டியில் ஆர்சிபி அணியை ரஜத் படிதார் தலைமை தாங்கினார். ஆனால் களத்தில் இருந்து பீல்டிங் சரி செய்வது, பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு இந்த பந்தை போடுங்கள் என ஆர்சிபி பந்து வீச்சாளர்களுக்கு அறிவுரை கூறுவது என மொத்தமாக கேப்டனாகவே மாறிவிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் சந்திரமுகியான கங்காவை பார் என்பது போல மீண்டும் கேப்டனாக மாறிய விராட் கோலியை பார் என காமெடியாக பதிவிட்டு வருகின்றனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆர்சிபி ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

Tags:    

Similar News