null
இந்த துண்டுச்சீட்டு 6 போட்டிகளாக அவர் பாக்கெட்டில் தான் இருந்தது... அபிஷேக்கை கிண்டலடித்த ஹெட்
- ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா 40 பந்தில் சதமடித்து அசத்தினார்.
- அபிஷேக் சதமடித்து விட்டு ஒரு துண்டுச்சீட்டை எடுத்து, ரசிகர்களை நோக்கி காட்டினார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 245 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 247 ரன்கள் எடுத்து வென்றது. அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்தார். அத்துடன் அணி வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.
இந்நிலையில், ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா 40 பந்தில் சதமடித்து அசத்தினார். சதமடித்து விட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுகையில் ஒரு துண்டுச்சீட்டை எடுத்து, ரசிகர்களை நோக்கி காட்டினார்.
அந்த துண்டுச்சீட்டில், 'This one is for Orange Army' (ஆரஞ்சு ஆர்மி ரசிகர்களே, இது உங்களுக்காகத்தான்) என எழுதப்பட்டிருந்தது.
போட்டி முடிந்ததும் அபிஷேக் சர்மாவின் துண்டுசீட்டு குறித்து பேசிய டிராவிஸ் ஹெட், "இந்த துண்டுசீட்டு 6 ஆட்டங்களாக அபிஷேக் சர்மாவின் பாக்கெட்டில் தான் இருந்தது. இன்று இரவு அது வெளிவந்ததில் மகிழ்ச்சி" என்று கிண்டலாக தெரிவித்தார்.